ஊழல் வழக்கு: ரமித் ரம்புக்வெல்ல கைது

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கில், ரமித் ரம்புக்வெல்ல, நீதிமன்றத்தால் சந்தேக நபராக செவ்வாய்க்கிழமை (20)  பெயரிடப்பட்டிருந்தார்.

May 21, 2025 - 15:19
ஊழல் வழக்கு: ரமித் ரம்புக்வெல்ல கைது

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளால் செய்யப்பட்டுள்ளார்.

ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவும், அவர்களைப் பராமரிக்கவும் அமைச்சின் நிதியில் இருந்து சுமார் 8 மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கில், ரமித் ரம்புக்வெல்ல, நீதிமன்றத்தால் சந்தேக நபராக செவ்வாய்க்கிழமை (20)  பெயரிடப்பட்டிருந்தார்.

இதனையடுத்து,   இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில், வாக்குமூலம் அளிக்க, புதன்கிழமை (21) காலை வந்திருந்தார். நான்கு மணிநேர விசாரணைக்கு பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!