அட்சய” என்பது குறையாதது, எப்போதும் பெருகிக் கொண்டே இருப்பது என்ற அர்த்தத்தை தருகிறது. இந்த நாளில் தொடங்கும் செயல்களும் வாங்கப்படும் பொருட்களும் வளம் சேர்க்கும் என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது.
அட்சய திருதியை நாளில் சுக்கிரன் ரிஷப ராசியில் நுழைந்து உருவாக்கும் கேந்திர திரிகோண ராஜயோகத்தால் ரிஷபம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கலாம் என ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.