Thursday, March 14, 2024
Homeஉலகசெய்திகள்உலக கோடீஸ்வரரின் திருநங்கை மகள் எடுத்த அதிரடி முடிவு!

உலக கோடீஸ்வரரின் திருநங்கை மகள் எடுத்த அதிரடி முடிவு!

HTML tutorial

உலகின் நம்பர் 1 கோடீஸ்வரர் எலான் மஸ்கிற்கு 7 குழந்தைகள் உள்ளனர். எலோன் மஸ்க் மற்றும் ஜஸ்டின் வில்சன் 2000 முதல் 2008 வரை திருமண பந்தத்தில் இருந்தபொழுது இந்த தம்பதிகளுக்கு மகனாக பிறந்தவர்தான் அலெக்சாண்டர் சேவியர் மஸ்க் .

இவருக்கு கிரிஃபின் என்ற இரட்டை சகோதரரும் உள்ளார். அலெக்சாண்டர் ஆண் குழந்தையாக பிறந்திருந்தாலும் , அவர் தன்னை ஒரு பெண்ணாகவே அடையாளப்படுத்த விரும்பினார்.

தற்போது 18 வயது பூர்த்தி அடைந்த சேவியர் அலெக்சாண்டர் மஸ்க் தனது பாலின அங்கீகாரத்தை ஆணிலிருந்து பெண்ணாக மாற்றி, தனது புதிய பெயரை பதிவு செய்யுமாறு நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.

PlainSite.org மூலம் ஆன்லைனில் கிடைக்கும் நீதிமன்ற ஆவணங்களின்படி, கடந்த மே மாதம் கலிஃபோர்னியாவில் பெயர் மாற்றம் மற்றும் அவரது புதிய பாலின அடையாளத்தை பிரதிபலிக்கும் புதிய பிறப்புச் சான்றிதழ் ஆகிய இரண்டிற்கும் விண்ணப்பம் செய்த மனு சாண்டா மோனிகாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்கை அலெக்ஸ் புறக்கணித்துள்ளார். அவர் குறிப்பிட்ட ஆவணத்தில் நான் இனி எனது தந்தையுடன் எந்த வகையிலும், வடிவத்திலும் வாழ விரும்பவில்லை . அவருடன் தொடர்பு கொள்ள விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.

எலான் மஸ்க் தரப்பிலிருந்து இதை மறுக்கும்படியாக எந்த பதிலும் வரவில்லை. முன்னதாக, அவர் டுவிட்டரில் ‘என் குழந்தைகளை நான் மிகவும் நேசிக்கிறேன்’ என பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3JWB0En

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

மேலும் செய்திகள்

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க