- Advertisement -
நடிகர் சல்மான் கானின் தம்பி அர்பாஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார் பிரபல பாலிவுட் நடிகையான மலாய்கா அரோரா. திருமணமாகி 18 ஆண்டுகள் கழித்து கணவரை பிரிந்தார். அதன் பிறகு தயாரிப்பாளர் போனி கபூரின் மகனும், நடிகருமான அர்ஜுன் கபூரை காதலித்து வந்தார்.
அர்ஜுனை விட மலாய்கா பெரியவர் என்பதால் இந்த காதலில் போனி கபூருக்கு உடன்பாடு இல்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில் அர்ஜுன் கபூருக்கும், மலாய்கா அரோராவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டார்களாம்.
காதல் முறிவை தாங்க முடியாமல் தனிமையில் வாடுகிறாராம் மலாய்கா. யாரையும் பார்க்க விரும்பாமல் வீட்டிலேயே இருக்கிறாராம். 6 நாட்களுக்கும் மேலாக மலாய்கா வீட்டிலேயே இருக்கிறாராம்.
அண்மையில் தான் இருவரும் மாலத்தீவுகளுக்கு எல்லாம் சென்று வந்தார்கள். அதற்குள் என்ன பிரச்சனை ஏற்பட்டது என்று ரசிகர்கள் வியக்கிறார்கள்.
2021ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி தான் அர்ஜுன் கபூருடனான காதலை இன்ஸ்டாகிராமில் உறுதி செய்தார் மலாய்கா அரோரா என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.