- Advertisement -
சம்பள பிரச்சினையைத் தீர்ப்பதற்கான சுற்றுநிருபம் இதுவரை வெளியிடப்படவில்லை என இலங்கை ஆசிரிய சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
குறித்த சுற்றுநிருபம் எதிர்வரும் 5ஆம் திகதிக்குள் வெளியிடப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய, ஜனவரி மாதத்தில் வேதனம் அதிகரிக்கப்படாவிட்டால் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக ஆசிரியர் – அதிபர் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம் எச்சரித்துள்ளது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.