- Advertisement -
தனியார் பஸ் கட்டணங்களை அதிகரிக்குமாறு, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனவரி முதலாம் திகதியிலிருந்து இந்த அதிகரிப்பை மேற்கொள்ளுமாறு அவர் கோரியுள்ளார்.
தமது இந்த யோசனையை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கும் போக்குவரத்து அமைச்சருக்கும் அடுத்த வாரம் அனுப்பவுள்ளதாக கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, ஆகக் குறைந்த பஸ் கட்டணமாக 20 ரூபாய் காணப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.