- Advertisement -
கொழும்பின் பல பகுதிகளில் 28 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
நாளை (13) இரவு 8 மணி முதல் 14 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிவரை இவ்வாறு நீர்விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 04,05,06,07 மற்றும் 08 ஆகிய பகுதிகளிலும், கோட்டே மற்றும் கடுவலை மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளிலும் நீர்வெட்டு அமுலில் இருக்கும்.
அதேநேரம், மஹரகம மற்றும் பொரலஸ்கமுவ நகரசபைக்குட்பட்ட பகுதிகளிலும் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.