திருநெல்வேலி மாவட்டம் பணகுடியைச் சேர்ந்தவர் மரிய கென்ஸ்லின் (27). முதுநிலை பட்டதாரியான கென்ஸ்லின் நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் தற்காலிக பேராசிரியையாக பணியாற்றி வந்தார்.
சில நாட்களாக கென்ஸ்லின் வீட்டில் இருப்பவர்களிடம் சரிவர பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் கென்ஸ்லின் தனது அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார்.
இதையடுத்து உறவினர்கள் வீட்டுக்கு வந்தபோது கென்ஸ்லின் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு பேரதிர்ச்சி அடைந்தனர்.
சம்பவம் அறிந்து வந்த பணகுடி பொலிஸார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து வழக்கு பதிவு செய்த பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், கென்ஸ்லின் அஞ்சுகிராமத்தில் உள்ள தனது உறவுக்கார வாலிபரை காதலித்து வந்துள்ளார்.
ஆனால், உறவுமுறையை காரணப்படுத்திய வாலிபரின் உறவினர்கள் திருமணத்துக்கு மறுத்துவிட்டனர். இதனால், மன உளைச்சலில் இருந்து வந்த கென்ஸ்லின் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்ற சந்தேகம் உறவினர்களிடையே எழுந்துள்ளது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.