காலையில் எழுந்ததும் இரண்டு பொருட்களை மட்டும் முதலில் தொட்டால் போதும் கையில் தாளாளமாக பணம் புலங்குவதுடன், பணம் உங்களை தேடி வந்து கொண்டே இருக்குமாம்.
காலை எழுந்ததும் முதலில் தண்ணீரை கையில் தொட வேண்டும். இது பெருக்கத்தை குறிக்கும் ஒரு பொருளாகும். தண்ணீரை தொட்டு, கைகளை கழுவியோ அல்லது முகத்தை கழுவிய பிறகு தான் மற்ற பொருட்களை கழுவ வேண்டும்.
காலையில் எழுந்ததும் தொட வேண்டிய மற்றொரு பொருள் உப்பு. இது மகாலட்சுமி வாசம் செய்யும் மங்கள பொருட்களில் ஒன்று. அதனால் காலையில் எழுந்ததும் உப்பினை தொட்டு, குறை தீர வேண்டினால் விரைவில் அது நடக்கும்.
தொடக் கூடாத பொருட்கள்
காலையில் எழுந்ததும் அரிசியை தொடக் கூடாது. இது மகாலட்சுமி வாசம் செய்யும் பொருட்களில் ஒன்றாக இருந்தாலும், ஈர்ப்பு தன்மை அதிகம் கொண்டதாகும். இதனால் உங்கள் கையில் இருக்கும் லட்சுமி கடாட்சத்தை முழுவதுமாக ஈர்த்து விடும். மறந்தும் கூட காலையில் எழுந்ததும் நேரடியாக சமையலுக்கு அரிசி எடுக்கிறேன் என அரிசியை தொட்டு விடாதீர்கள்.
புளி மங்கள பொருள் என்றாலும் எளிதில் கரையும் தன்மை கொண்டது என்பதால் கையில் இருக்கும் காசையும் சீக்கிரம் கரைய வைத்து விடும்.