உக்ரைன் மீதான போரைத்தொடங்கி வீறுகொண்டு நடத்தினாலும், சமரச பேச்சு நடத்த ரஷியா இணங்கி வந்துள்ளது. பல்வேறு நாடுகளின் பொருளாதார தடைகளும், உள்நாட்டில் இருந்து வருகிற அழுத்தங்களும் ரஷியாவை இறங்கி வரச்செய்துள்ளது.
பேச்சுவார்த்தைக்காக பெலாரஸ் நாட்டில் உள்ள ஹோமெல் நகருக்கு ரஷிய தூதுக்குழு வந்து சேர்ந்து விட்டதாகவும் ரஷிய அதிபர் மாளிகை சொல்கிறது.
அவர்கள் உக்ரைன் தூதுக்குழுவின் வருகைக்காக காத்திருப்பதாகவும் ரஷிய அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமெட்ரி பெஸ்கோவ் உறுதி செய்திருந்தார்.
வல்லமைமிக்க ரஷியா வான், கடல், நிலம் என மும்முனை தாக்குதல் நடத்தினாலும், பெரும் பொருள் சேதம், உயிர்ச்சேதம் அடைந்தாலும், உக்ரைன் நிலை குலைந்து போய்விடவில்லை. அதைத்தான் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி வெளியிட்டு வருகிற வீடியோ செய்திகள் காட்டுகின்றன.
அதனால்தான் ரஷியாவின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் இணங்கினாலும் அது நிபந்தனை விதிப்பதாக தகவல்கள் வெளிவந்தநிலையில், பெலாரஸ் நாட்டின் ஹோமெல் நகரில் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு சம்மதம் தெரிவிப்பதாக உக்ரைன் அரசு நேற்று இரவு அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இதன்படி பெலாரஸ் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் ஒரு குழுவை அனுப்புவதை உறுதி செய்திருந்தது. இந்நிலையில் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ள உக்ரைன் குழு பெலாரஸ் சென்றடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.