Sri Lanka News Live and Tamil Breaking News

மதுபோதையில் நிர்வாணமாக விருந்து நடத்திய 16 பேர் ஆடையில்லாமல் கைது

0 15

- Advertisement -

கென்யா நாட்டில் உள்ள பள்ளி மாணவர்கள் சிலர் விடுமுறையை கொண்டாது மது குடித்துக்கொண்டே பார்ட்டி நடத்தி பொலிஸாரிடம் சிக்கி கொண்டனர்.

கென்யாவின் கிட்டூவு மாகாணத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. இந்நிலையில் விடுமுறையில் வெளியூரிலிருந்து வந்து தங்கி படிக்கும் மாணவ மாணவிகள் பள்ளி பஸ்சில் வீட்டிற்கு அனுப்பபட்டடனர்.

இந்நிலையில் பள்ளி பஸ் விபத்தில் சிக்கியது. அதில் மிக குறைவான மாணவர்களே இருந்தனர். விபத்தில் பஸ் டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்நிலையில் மற்ற மாணவர்கள் என்ன ஆனார்கள் என விசாரிக்க துவங்கினர். இந்நிலையில் சில மாணவர்கள் பாதி வழியிலேயே இறங்கி பார்ட்டிசெய்ய சென்ற விஷயம் பொலிஸாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து பொலிஸார் தீவிரமாக சோதனை நடத்தினர். அதில் 16 மாணவர்கள் (ஆண்களும், பெண்களும் சேர்ந்து) ஒரு கிளப்பில் குடி போதையில் நிர்வாணமாக பார்ட்டியை நடத்தியுள்ளனர்.

இதையடுத்து பொலிஸார் கிளப் உள்ளே இருந்த 10 பேர் மற்றும் கிளப் பின்னால் இருந்த காட்டு பகுதியிலிருந்து 6 பேரை கைது செய்தனர். அவர்கள் கைது செய்யும் போது பலர் அதில் நிர்வாணமான நிலையில் இருந்துள்ளனர்.

இதையடுத்து பொலிஸார் அவர்களை பொலிஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று அவர்களின் பெற்றோர்களை தொடர்பு கொள்ள முயற்சி செய்து வருகின்றனர்.

பள்ளி மாணவர்கள் மது போதையில் பார்ட்டி நடத்திய சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

Get real time updates directly on you device, subscribe now.

- Advertisement -

Leave a comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More