பர்கர் கிங்கில் பணிப்புரிந்து வந்த அந்த ஊழியரின் பெயர் கெவின் போர்ட். இவரது உழைப்பை பாராட்டி, திரைப்பட டிக்கெட், ஸ்டார்பக்ஸ் சிப்பர், மற்றும் சில சாக்லேட் என இவருக்கு வேலைக் கொடுத்த அந்நிறுவனம் சின்ன சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறது.
ஆனால், கெவினுக்கு ஒரு ஆன்லைனில் ஃபண்ட்ரைஸர் பக்கத்தின் மூலமாக ரூ.1.5 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது.
கெவின் போர்ட் எனும் அந்த ஊழியரின் மகள் செரினா ‘கோ ஃபண்ட் மீ’ என்ற பக்கத்தில் தனது தந்தை குடும்பத்திற்காக, குழந்தைகளின் வளர்ச்சிக்காக 27 வருடங்களாக வேலைக்கு ஒரு நாள் கூட லீவ் போடாமல் உழைத்து வருகிறார் என குறிப்பிட்டு ஒரு டொனேஷன் போஸ்ட் பதிவிட்டிருந்தார்.
இப்போது அந்த டொனேஷன் பதிவின் மூலமாக கெவினுக்கு 2 லட்ச அமெரிக்க டாலர்கள் நன்கொடையாக கிடைத்துள்ளது. இந்திய மதிப்பில் இது ரூ.1.57 கோடி ஆகும்.
54 வயதான கெவினிக்கு இன்டர்நெட் மூலம் ஒரு பெரும் உதவி கிடைத்துள்ளது. இதை வெறும் உதவி என்பதை குறிப்பிடுவதை விட, கெவினின் 27 வருட உழைப்பிற்கு கிடைத்த சன்மானம் என்றே கூற வேண்டும்.
பொதுவாக அயராது உழைக்கும் ஊழியர்களுக்கு நிறுவனம் சலுகை கூப்பன், சாக்லேட் கூடை என சொற்பமாக தான் பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கும். ஆனால், இன்டர்நெட் கெவினின் உழைப்பிற்கு நிகரான பெரும் பரிசைக் கொடுத்து அவரை ஆச்சரியத்தில் திக்குமுக்காட வைத்துள்ளது.
இப்போது கெவின் மீது பலரும் தங்கள் அன்பைக் கொட்டி வருகின்றனர். பல உள்ளூர் ஊடகங்கள் கெவினை பேட்டி எடுத்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.