கொரோனா மூன்றாவது அலை கடந்த இரண்டு மாதமாக உலக நாடுகளை வாட்டி வதைத்து வந்தது. ஊடரங்கு, தடுப்பூசி என உலக நாடுகள் எடுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக கொரோனாவின் தாக்கம் கடந்த சில வாரங்களாக குறைந்து வருகிறது.
இதனையடுத்து ஊரடங்கு கட்டுப்பாட்டிலும், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளிலும் உலக நாடுகள் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகின்றன. இந்த தளர்வுகளில் குறிப்பிடும்படியான முக்கிய அறிவிப்பு ஒன்றை இத்தாலி அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் பெருமளவில் குறைந்து வருவதால், பொது இடங்களில் மக்கள் இனி மாஸ்க் (முககவசம்) அணிய வேண்டிய அவசியமில்லை என்று இததாலி அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
அதேசமயம், நாட்டில், தொற்று பரவல் குறைந்தாலும், இறப்பு விகிதம் இன்னும் குறையவில்லை என்பதால் வரும் மார்ச் 31 ஆம் திகதி வரை கூட்ட அரங்குகள் மற்றும் கலாசார நிகழ்வுகளில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க இருக்க வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.