- Advertisement -
பேராதனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மகாவலி கங்கையில் களுகமுவ பிரதேசத்தில் நீராடச் சென்ற ஐந்து பேரில், ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (05) பிற்பகல் நேரத்தில் ஐந்து பேர் நீராடச் சென்ற நிலையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
நீரிழல் மூழ்கியவர்களில் ஆண் மற்றும் சிறுவன் ஆகிய இருவர் பிரேதேச மக்களால் காப்பற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், 20 வயதுடைய இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், பெண் ஒருவரும் சிறுமியும் காணாமல் போயுள்ளனர்.
கண்டியைச் சேர்ந்தவர்களே இந்த அனர்த்தத்துக்கு முகங்கொடுத்துள்ளதுடன், காணாமல்போனவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.