ஏழரை சனியில் சிக்கிய ராசிக்காரர்கள்
கோள்களின் பெயர்ச்சி காரணமாக அனைத்து ராசிக்காரர்களுக்கும் ஏழரை சனி கடந்து வர வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு மாற்றம் ஏற்படும் போது குறித்த ராசிக்கார்களுக்கு ஆபத்து விளைவிக்கும்.
ஆனால் இவ்வாறு மாற்றமடையும் போது நாம் பயப்பட வேண்டிய அவசியமில்லை, நாம் செய்த நல்ல விடயம், பாவங்கள் இவற்றினை அடிப்படையாக கொண்டே சனிபகவானும் அள்ளிக் கொடுப்பார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் 17ம் திகதியிலிருந்து 30 ஆண்டுக்கு பின்பு மூல திரிகோண ராசியில் நுழைவதால், சில ராசிகளுக்கு ஏழரை சனியின் தாக்கம் ஆரம்பித்து விடுகிறது.
ஏழரை சனியில் சிக்கிய ராசிகள்
ஏழரை சனியில் மகர ராசியில் இருக்கிறது. இதன்படி ஏழரை சனியில் சிக்கபோகும் ராசிக்காரர்களாவன மகரம், கும்பம், மீனம் போன்றவை பார்க்கப்படுகிறது.
இதில் கடகம் மற்றும் விருச்சிகம் ராசிகளுக்கு சனி தசையின் தாக்கமும் இன்றிலிருந்து தொடங்கியுள்ளது.
ஏழரை சனியில் தப்பித்துள்ள ராசிகள்
குறித்த சனிப் பெயர்ச்சியிலிருந்து விடுபடும் ராசிகளாக துலாம், மிதுனம் போன்ற ராசிகள் பார்க்கப்படுகிறது.
இந்த ராசிகளுக்கு சனியின் தாக்கம் படிப்படியாக குறைவதுடன், தனுசு ராசியினர் அனுபவித்து வந்த துன்பங்கிலிருந்து விடுதலை பெறுவர்.
பரிகாரம்
சனிப்பெயர்ச்சி சிக்கியுள்ளவர்கள் சனி பகவானுக்கு பிடித்த எண்ணெய், கருப்பு உளுந்து, கருப்பு ஆடைகள், இரும்பு, கருப்பு போர்வை போன்றவற்றை தானமாக கொடுக்கலாம்.