சதொச நிறுவனத்திற்கு சொந்தமான வெள்ளைப்பூடு அடங்கிய இரண்டு கொள்கலன்களை பிறிதொரு தரப்பினருக்கு வழங்கிய குற்றச்சாட்டில் லங்கா சதொச நிறுவனத்தின் நான்கு ஊழியர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சதொசவின் பிரதிப் பொது முகாமையாளர் உள்ளிட்ட நான்கு ஊழியர்களும் நேற்று பிற்பகல் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த நான்கு ஊழியர்களில் மூன்று பேர் இடைநீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகள் மற்றையவர் அண்மையில் சேவையில் இணைந்தவர் ஆவார் என்று சதொச ஆதாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களில் கையெழுத்திட்ட குற்றச்சாட்டின் கீழ் நேற்று கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் இவர்களை இன்று வெலிசறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக இடைநீக்கம் செய்யப்பட்ட அதிகாரி ஒருவர் முன்பு கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்கத்கது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.