நாள்பட்ட நோய் நிலைமையினால் பாதிக்கப்பட்டுள்ள மற்றும் விசேட தேவையுடைய 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மேல் மாகாணத்தில் நேற்று ஆரம்பமானது.
இந்த நிலையில், ஏனைய மாகாணங்களில் உள்ள 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன், குறித்த பகுதிகளில் நாட்பட்ட நோய் நிலைமையினால் பாதிக்கப்பட்டுள்ள மற்றும் விசேட தேவையுடைய 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு முதற் கட்டமாக தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.