- Advertisement -
தாம் அரசாங்கத்திலிருந்து வெளியேறும் பட்சத்தில், தமது கட்சியைச் சேர்ந்த 14 உறுப்பினர்கள் மாத்திரமன்றி, மேலும் பலரை அழைத்துக்கொண்டே வெளியேறுவதாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.
கட்சியின் சிரேஷ்ட உபத் தலைவரும், அமைச்சருமான மஹிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த பலர், அரசாங்கத்தை விட்டு வெளியேறும் சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தாம் அரசாங்கத்தை விட்டு வெளியேறும் போது, தம்முடன் எத்தனை பேர் வருகின்றார்கள் என்பதை பார்க்க முடியும் என அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.