நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 21 ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படுவதற்கு எதிராக அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்று திரண்டு போராடவுள்ளதாக ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க கூட்டணி தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று(17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனை இதனைக் கூறியுள்ளார்.
தங்களது சம்பள பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் பாடசாலைகள் மீளத் திறக்கப்பட்டாலும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.