- Advertisement -
தனது மனைவியை கூரிய ஆயுதங்களால் தாக்கிய சந்தேகநபரை 10,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் 100,000 ரூபா சரீரப் பிணையில் விடுவிக்குமாறு தம்புத்தேகம நீதவான் உத்தரவிட்டார்.
இராஜாங்கனை பகுதியில் வசிக்கும் ஒருவரே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நிலையில் அவர் தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அவரது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்துள்ளார். இதனை கேள்வியுற்ற சந்தேகநபர், வீட்டுக்கு அருகில் மறைந்திருந்து இரவு வேளையில் வீட்டிற்குள் சென்று இருவரையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தன்று இரவு இராஜாங்கனை பொலிஸில் சரணடைந்த சந்தேகநபர், மேலதிக விசாரணைகளுக்காக நொச்சியாகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் இராஜாங்கனை மற்றும் நொச்சியாகம பொலிஸார் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சந்தேகநபரை 10,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் 100,000 ரூபா சரீரப் பிணையில் விடுவிக்குமாறு தம்புத்தேகம நீதவான் உத்தரவிட்டார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.