காலை 7.30க்கு பாடசாலைகள் ஆரம்பிக்கும். கற்பித்தல் செயற்பாடுகள் யாவும் பிற்பகல் 1.30க்கு நிறைவடையும் அந்த நேரத்துக்குள் கற்பித்தல் செயற்பாடுகளை மட்டுமே ஆசிரியர்கள் முன்னெடுப்பார்கள் எனத் தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
ஆரம்பப் பாடசாலைகள் யாவும் நேற்று (25) ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதிபர், ஆசிரியர்கள் பாடசாலைகளுக்குச் சென்றுள்ளனர் எனத் தெரிவித்த அவர், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மேலே குறிப்பிட்ட நேரத்துக்குள் மட்டுமே கற்பிப்போம் என்றார்.
பாடசாலைகளில் கற்பித்தல் செயற்பாடுகளைத் தவிர இதர வேலைகள் எவற்றையும் ஆசிரியர்கள் செய்யமாட்டார்கள். அதேநேரத்தில் சம்பள முரண்பாடு உள்ளிட்ட எமது கோரிக்கைகளை வென்றெடுக்கும் வரையிலும் எமது போராட்டத்தை முன்னெடுப்போம்.
அதனடிப்படையிலேயே கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு
முன்பாக, நேற்று (25) பாடசாலைகள் விட்டதன் பின்னர் ஆர்ப்பாட்டம்
முன்னெடுக்கப்பட்டது என்றார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.