- Advertisement -
மின் உற்பத்தி நிலையங்களில் சேவையாற்றும் பொறியியலாளர்களின் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடு முழுவதும் இன்று முற்பகல் 11.30 மணி முதல் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொழும்பில் பல பகுதிகளுக்கும் அநுராதபுரம், ஹபரணை, லக்சபான – அதுருகிரிய மற்றும் கொத்மலை – பியகம ஆகிய மின் விநியோக பாதைகளுக்கான மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சாரத் தடையானது, மின் பொறியியலாளர் சங்கத்தின் நாசகார வேலையாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக மின்சார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.