Saturday, April 20, 2024
Homeதேசியசெய்திகள்காகத்தால் தாமதமடைந்த எரிபொருள் விநியோகம்

காகத்தால் தாமதமடைந்த எரிபொருள் விநியோகம்

HTML tutorial

காகம் ஒன்றினால் பண்டாரகம பிரதேசத்தில் எரிபொருள் விநியோகம் அரை மணிநேரத்துக்கும் மேலாக தடைப்பட்டுள்ளது.

பண்டாரகம கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான எரிபொருள் நிலையத்துக்கு ஐந்து நாட்களின் பின்னர் திங்கட்கிழமை எரிபொருள் வந்தடைந்துள்ளது.

அப்பிரதேசத்தில் இருக்கும் ஒரே எரிபொருள் நிலையம் என்பதால் பொதுமக்கள் ஏராளமானோர் எரிபொருளுக்காக காத்திருந்துள்ளனர்.

அதனையடுத்து நீண்ட வரிசைகளில் காத்திருந்த பொதுமக்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் பணிகளை ஆரம்பிக்க முற்படும் ​போது பாரிய வெடிப்புச் சத்தத்துடன் பண்டாரகம பிரதேசமெங்கும் இருளில் மூழ்கியுள்ளது.

இதன்போது, மின்மாற்றி ஒன்றில் காகம் ஒன்று மோதி மின்தடை ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து மின்சார சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் வந்து மின்சாரத் தடையை மீண்டும் சரிசெய்யும் வரை அரை மணி நேரத்துக்கும் மேலாக எரிபொருள் விநியோகம் தடைப்பட்டிருந்ததாக தெரிய வந்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3JWB0En

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

RELATED ARTICLES

இதயும் பாருங்க

இதயும் பாருங்க

சற்று முன்