நிர்வாக முடக்கல் போராட்டம்குறித்து, பொலிஸ் ஊடகப் பிரிவு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
போராட்டத்தில் ஈடுபடும் உரிமையை பயன்படுத்தும்போது, ஏனையவர்களின் உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்படக் கூடாது என அந்த அறிவித்தலில் பொலிஸார் கூறியுள்ளனர்.
நிர்வாக முடக்கல் காரணமாக, தொழிலில் அல்லது வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது என அச்சுறுத்தும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சிரேஷ்ட பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிக் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம், நாடளாவிய ரீதியில், பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட எவருக்கும் உரிமை உள்ளது.
எனினும், கலகம் விளைவிக்கும் வகையில், செயற்படுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, போராட்டத்தில், ஈடுபடுபவர்கள், அமைதியான முறையில் அதில் ஈடுபடுமாறு சிரேஷ்ட பொலிஸ் பேச்சாளர், அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.