நிலவும் நெருக்கடி காரணமாக, கொழும்பு முன்னுரிமைப் பகுதிகள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் நேற்று முன்தினம் (05) முதல் நாளை 08 ஆம் திகதி வரை தினமும் 6 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, இன்றைய தினம் A,B,C,D,E,F ஆகிய வலயங்களுக்கு பிற்பகல் ஒரு மணி முதல் மாலை 5 மணிவரை 4 மணி நேரமும், மாலை 7.30 மணி முதல் இரவு 10 மணிவரை 2 மணிநேரமும் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
G,H,I,J,K,L வலயங்களுக்கு காலை 8 மணி முதல் மதியம் 12 மணிவரை 4 மணி நேரமும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 வரை 2 மணிநேரமும் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
P,Q,R,S ஆகிய வலயங்களுக்கு பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணிவரை 4 மணி நேரமும், இரவு 8.30 மணி முதல் இரவு 11 மணிவரை 2 மணிநேரமும் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
T,U,V,W ஆகிய வலயங்களுக்கு காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை 4 மணி நேரமும், மாலை 6 மணி முதல் இரவு 8.30 வரை 2 மணிநேரமும் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
அத்துடன், கொழும்பு (CC1) முன்னுரிமைப் பகுதியில் நாளை (7) காலை 6 மணிமுதல் காலை 9.30 மணிவரை 3 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.