திங்கட்கிழமை முதல் திட்டமிடப்பட்ட மின் தடைகளுக்கு அனுமதி வழங்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாளை முதல் ஒரு மணித்தியாலம் முதல் இரண்டு மணிநேரம் வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கு இலங்கை மின்சார சபை கோரியதை அடுத்து உரிய அனுமதி வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாளாந்தம் இரண்டரை மணிநேரத்திற்கு மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில் மின்சார சபை அவதானம் செலுத்தியுள்ளது.
இதற்கமைய மின்சாரத்தை துண்டிக்கும் நேரம் தொடர்பில் தற்போது கலந்துரையாடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
முற்பகல் 11 மணிமுதல் பிற்பகல் 6 மணிவரையிலான காலப்பகுதியில் ஒரு மணிநேரம் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில் கலந்துரையாடப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதவிர, பிற்பகல் 6 மணிமுதல் 9 மணி வரையிலான காலப்பகுதியில் 45 நிமிடங்கள் என்ற அடிப்படையில் இரண்டு தடவைகள் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்படுகின்றது.
எவ்வாறாயினும், இது தொடர்பில் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.