சலுகை விலையில் பாடசாலை மாணவர்களுக்கு தேவையான அப்பியாச கொப்பிகளை வழங்குவதற்கு இலங்கை சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
லங்கா சதொசவின் விற்பனைத் திணைக்களத் தலைவர் சவான் காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்களுக்கு லங்கா சதொசவிடம் இருந்து உயர்தர SPC பயிற்சிப் புத்தகங்கள் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அரச அச்சக சட்டப்படுத்தப்பட்ட கூட்டுத்தாபனத்தினால் உற்பத்தி செய்யப்படும் உயர்தர அப்பியாசக் கொப்பிகள் நாடு முழுவதுமுள்ள 48 லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக விற்பனை செய்யப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM – இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/SeithiLK
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.