- Advertisement -
பண்டிகைக் காலத்தில் பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்துமாறு பொது சுகாதார பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் பொது சுகாதார பணியாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் உபுல் ரோஹன கருத்து வெளியிடுகையில், கடந்த சில வாரங்களாக பொதுமக்கள் நடந்துகொண்ட விதம் காரணமாக பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவது தவிர்க்க முடியாததாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், பண்டிகைக் காலங்களில் பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்தத் தவறினால், ஜனவரியில் கடுமையான நிலைமை ஏற்படும் என்றும் அவர் கூறினார்.
நாட்டை மீண்டும் முழுமையாக முடக்கப்படுவதை தடுக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சகம் கடந்த வாரம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.