- Advertisement -
ஹங்வெல்ல – அவிசாவளை, புவக்பிட்டிய தும்மோதர குமாரி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்று காணாமல் போன மூவரில் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வெள்ளவத்தை பிரதேசத்தில் உறவினர் வீட்டுக்கு வந்த இவர்கள் நேற்று உறவினர்களுடன் குமாரி எல்ல நீர்வீழ்ச்சிக்கு நீராட சென்றுள்ளனர்.
நேற்று மாலை பெய்த கடும் மழையினால் திடீரென நீர்வீழ்ச்சியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நீராடிக்கொண்டிருந்த ஆறு நபர்கள் நீரில் அடித்துச் சென்றுள்ளனர்.
மூன்று நபர்களை பிரதேசவாசிகள் காப்பாற்றியுள்ளனர். ஒரு யுவதியும் இரண்டு சிறுமிகளும் நீரில் அடித்துச் சென்றுள்ளனர்.
ஹங்வெல்ல பொலிசார் மற்றும் களுவக்கல்ல இராணுவ முகாமின் அதிகாரிகள், பிரதேசவாசிகள் இணைந்து காணாமல் போனவர்களை தேடியுள்ளனர்.
இதன்போது, இரவு 11 மணியளவில் சிறுமி ஒருவரின் சடலம் நீர்வீழ்ச்சியில் இருந்து 100 மீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டது. உயிரிழந்த சிறுமி 16 வயதுடையவர் என்று நம்பப்படுகின்றது. மேலும், காணாமல் போயுள்ள இருவரையு தேடும் பணி தொடர்கின்றது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.