நாட்டில் இன்று (16) மத்திய, சப்ரகமுவ வட மேல் மற்றும் மேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழைப் பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வட மாகாணத்தில் இன்று (16) காலை சிறியளவில் மழைப்பெய்யக்கூடும் என அத்திணைக்களம் கூறியுள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மழையுடனான வானிலை நிலவும் அதேவேளை, மத்திய மழைநாட்டின் மேற்கு சரிவிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 40 கிலோமீற்றராக அதிகரிக்கக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.