Saturday, April 20, 2024
Homeதேசியசெய்திகள்எரிபொருள் விலையை உடனடியாக அதிகரிக்குமாறு அழுத்தம்

எரிபொருள் விலையை உடனடியாக அதிகரிக்குமாறு அழுத்தம்

HTML tutorial

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில் இலங்கையில் குறைந்த விலையில் எரிபொருள் வழங்க முடியாது. எனவே பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலையை அதிகரிக்குமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ஐ.ஒ.சி நிறுவனம் ஆகியன அரசாங்கத்திற்கு வலியுறுத்தியுள்ளனர்.

அரசாங்கத்தின் அனுமதியை பெற்று எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டும் என்ற தேவைப்பாடு இல்லாத போதிலும் அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்காக காத்திருப்பதாக இலங்கை ஐ.ஒ.சி நிறுவனம் கூறியுள்ளது.

இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில் மக்களின் எதிர்ப்பு மற்றும் அதிருப்தி என்னவென்பது அண்மைக்காலமாக வெளிப்பட்டு வருகின்ற நிலையில் தற்போது எரிபொருள் விலையை அதிகரிக்கும் கோரிக்கைகள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில் இலங்கையில் தொடர்ந்தும் எரிப்பொருள் நட்டத்தில் இறக்குமதி செய்ய முடியாது, இதனால் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனதிற்கும், இலங்கை ஐ.ஒ.சி நிறுவனத்திற்கும் பாரிய நட்டம் ஏற்படப்போவதாகவும் அவர்கள் தொடர்ச்சியாக தெரிவித்துள்ளனர்.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

RELATED ARTICLES

இதயும் பாருங்க

இதயும் பாருங்க

சற்று முன்