இலங்கை முதலீட்டுச் சபையின் உறுப்பினர்கள் சிலரின் இராஜினாமா கோரிக்கையை ஜனாதிபதி நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் உட்பட பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் பலரின் இராஜினாமாவே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த உறுப்பினர்கள் கடந்த வாரம், தங்களது பதவிகளில் இருந்து இராஜினாமா செய்ய தீர்மானித்திருந்தனர்.
எவ்வாறாயினும், அவர்களின் சேவை தொடர்ந்து முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக இலங்கை முதலீட்டு சபை அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.