- Advertisement -
தபால் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 32 மணித்தியால அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளனர்.
இன்று மாலை 4 மணி தொடக்கம் நாளை நள்ளிரவு வரை வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தொழிற்சங்கங்கள் கூறியுள்ளன.
எவ்வாறாயினும், பல தபால் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இன்று காலை 10 மணிக்கு வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளரை சந்தித்து தமது கவலைகள் குறித்து கலந்துரையாட உள்ளனர்.
தபால் ஊழியர்கள் மற்றும் தபால் திணைக்களத்திற்கு ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை தபால் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் சங்கத்தின் தலைவர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.