- Advertisement -
கால்நடை தீவன தட்டுப்பாடு காரணமாக கோழி, முட்டை என்பனவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக கோழி மற்றும் முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை கடுமையாக உயரும் என அவர்கள் கூறியுள்ளனர்.
எதிர்வரும் நாட்களில் கோழி இறைச்சி ஒரு கிலோகிராம் 900 – 1000 ரூபாய் வரை அதிகரிக்கும் எனவும் முட்டை 40 – 50 ரூபாய் வரையில் அதிகரிக்கவுள்ளதாகவும் கோழி மற்றும் முட்டை உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
டொலர் தட்டுப்பாடு காரணமாக கடன் கடிதம் வழங்க முடியாமல் கோழி தீவனம் உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நாட்டில் உள்ள பல கோழி மற்றும் முட்டை பண்ணைகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இன்னும் பல மூடப்படும் என கால்நடை தீவன உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் சுசில் குமார ஹீன்கெந்த தெரிவித்துள்ளார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.