- Advertisement -
அரிசியின் விலை அதிகரிக்கப்படாவிட்டால் எதிர்வரும் நாட்களில் உற்பத்தி நடவடிக்கைகளிலிருந்து விலக நேரிடும் என இலங்கை அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சுராஜ் ஜயவிக்ரம தெரிவித்துள்ளார்.
அரிசி உற்பத்தியாளர்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ள நிலையில், கீரி சம்பா அரிசிக்காக 160 ரூபாய் என்ற சில்லறை விலை பெற்றுத் தரப்பட வேண்டும் என இலங்கை அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கூறியுள்ளார்.
இது குறித்து கருத்து வெளியிட்ட அந்த சங்கத்தின் செயலாளர் முதித் பெரேரா, அடிமட்டத்தில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என கூறியுள்ளார்.
அத்துடன், சகல பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில் அரிசியின் விலையை மாத்திரம் குறைத்து வழங்குவது பொருத்தமற்றதெனவும் இலங்கை அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.