- Advertisement -
13 வயது சிறுமி ஒருவர் பாட்டன், மாமா மற்றும் அவரது மூத்த சகோதரர் ஆகியோரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
மொனராகலை, எத்திமலே காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில், பாடசாலை மாணவியான சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டதையடுத்து இவரை பரிசோதித்த வைத்தியர்கள் கருத்தரித்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
13 வயது சிறுமி துஸ்பிரயோகம்
இச்சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை அதிகாரிகள் எத்திமலே காவல்துறையினருக்கு தெரியப்படுத்தியதையடுத்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதில் , சிறுமி தனது பாட்டன், மாமா (தாயின் சகோதரர்) மற்றும் சிறுமியின் மூத்த சகோதரரால் தொடர்ந்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
சிறுமியின் சகோதரனை முதலில் கைது செய்த காவல்துறையினர், இதையடுத்து பாட்டன் மற்றும் மாமாவை கைது செய்ய விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமி மேலதிக சட்ட வைத்திய மருத்துவ பரிசோதனைக்காக மொனராகலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.