எரிபொருள் விநியோகம் நாடளாவிய ரீதியில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் பாதுகாப்பு நிலைமை மற்றும் ஊரடங்கு சட்டம் ஆகியவற்றை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
எவ்வாறிருப்பினும், அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம், பாதுகாப்புக்கு மத்தியில், எரிபொருளை விநியோகிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த நிலையில், கொள்கலன் தாங்கி ஊர்திகள், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சென்றபோதும், எரிபொருள் விநியோகம் இடம்பெறவில்லையென அகில இலங்கை கொள்கலன் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
திங்கட்கிழமை ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து, நாளை (12) காலை 7 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்கெனவே எரிபொருள் தட்டுப்பாடு நிலவிவருகின்ற வேளையில், இவ்வாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்தியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.