Saturday, April 20, 2024
Homeதேசியசெய்திகள்கொலை சம்பவம் தொடர்பில் நான்கு பேர் பொலிஸாரால் அதிரடியாக கைது

கொலை சம்பவம் தொடர்பில் நான்கு பேர் பொலிஸாரால் அதிரடியாக கைது

HTML tutorial

வாழைத்தோட்டம் பகுதியில் நபரொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

கடந்த 4 ஆம் திகதி இரவு கெசல்வத்த பவாஸ் என்ற நபர் கூரிய ஆயுதங்களால் தாக்கிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தார்.

இந்த நிலையில், சந்தேக நபர்கள் நால்வர் நேற்று (5) இரவு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடம் இருந்து, கொலைக்காக பயன்படுத்தப்பட்ட 4 கூரிய வாள்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

அத்துடன், கொலைசெய்ய சந்தேக நபர்கள் பயணித்த கார் இனங்காணப்பட்டுள்ளதுடன், இதனை கைப்பற்ற பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

வழைத்தோட்டம் பகுதியைச்சேர்ந்த 23 முதல் 31 வயதுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைத்தோட்டம் பொலிஸார் மற்றும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

RELATED ARTICLES

இதயும் பாருங்க

இதயும் பாருங்க

சற்று முன்