- Advertisement -
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மாநாடொன்றில் கலந்துகொள்வதற்காக இம்மாதம் 10 ஆம் திகதி அவர், இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
10 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரையில் இந்தியாவில் தங்கியிருக்கும் அவர், இந்தக் காலப்பகுதியில் இந்திய பிரதமரை சந்திப்பார்.
இதன்போது இலங்கை எதிர்நோக்கும் டொலர் நெருக்கடி நிலைமை தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏற்கெனவே கடந்த டிசெம்பர் மாதத்தில் பசில் ராஜபக்ஷ, இந்தியாவுக்கு சென்றிருந்தார்.
இதேவேளை, நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ அமெரிக்கா சென்றிருந்த நிலையில் தற்போது நாடு திரும்பியுள்ளார்.
கடந்த டிசெம்பர் 15 ஆம் திகதி அமெரிக்காவுக்கு சென்றிருந்த அவர், இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.