பெந்தோட்டை கடற்கரைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவின் பின்புற ஆசனத்திலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து, குறித்த சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபர் 40 அல்லது 45 வயது மதிக்கத்தக்க ஆணொருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
பெந்தோட்டை கடற்கரைக்கு அருகில் ரயில் பாதைக்கு அண்மையில் உள்ள காட்டுப் பகுதியில் இந்த ஆட்டோ நிறுத்தப்பட்டிருந்ததாக விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.