முறையான வழிகளில் தங்கள் வருமானத்தை அனுப்புவதற்கு உதவுமாறு இலங்கை மத்திய வங்கி இலங்கை புலம்பெயர்ந்த தொழிலார்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுவரை இலங்கைப் பொருளாதாரத்திற்கு புலம்பெயர்ந்த தொழிலார்கள் ஆற்றிய பங்களிப்புகளுக்கு நன்றி தெரிவித்துள்ள மத்திய வங்கி, அவர்களின் தொடர்ச்சியான உதவிகளை கோரியுள்ளது.
நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள தற்போதைய அந்நிய செலாவணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு புலம்பெயர்ந்த தொழிலார்கள் பணம் அனுப்புவது முக்கியமான தருணம் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
ஹவாலா மற்றும் உண்டியல்
ஹவாலா மற்றும் உண்டியல் போன்ற முறைசாரா வழிகள் ஊடாக வங்கி வலையமைப்பிற்கு வெளியே செயற்படுவதால் இவ்வாறான முறைமைகளின் ஊடாக அனுப்பப்படும் அந்நியச் செலாவணியை அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு பயன்படுத்த முடியாது என மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.