மாவத்தகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாஸ்வெவ பிரதேசத்தில் சந்தேக நபர்கள் மூவரும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து 15 கிராம் ஹெரோயின் / ஒரு வாள் / 03 தடைசெய்யப்பட்ட கத்திகள் மற்றும் சந்தேகத்துக்கு இடமான மிருகத்தோல் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன், அவர்களிடம் இருந்து 1,46,000 ரூபாய் பணத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 41 மற்றும் 55 வயதுடைய பிலஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.
விசாரணையின்போது, சந்தேக நபர்களில் ஒருவர் ஏறக்குறைய 50 திருட்டுகளை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, சந்தேக நபர்கள் இன்று(24) பிலஸ்ஸ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.