13 வயதுடைய சிறுமியை காட்டு யானையிடமிருந்து அவரது தாயும், பாட்டியும் போராடி மீட்ட சம்பவம் தம்புத்தேகமவில் பதிவாகியுள்ளது.
குறித்த சிறுமி பாடசாலைக்கு செல்வதற்காக தனது பாட்டியின் வீட்டிலிருந்து தனது வீடு நோக்கி சென்றுகொண்டிருந்தபோது, திடீரென காட்டு யானை சிறுமியை தாக்கியுள்ளதோடு, அவரை தூக்கி சில மீற்றர் தூரத்துக்கு வீசியுள்ளது.
சத்தம் கேட்டு சம்பவ இடத்துக்கு ஓடிய சிறுமியின் தாயும், அவரது பாட்டியும் யானையுடன் போராடி அவரை மீட்டுள்ளனர். இச்சம்பவத்தில் சிறிய காயங்களுடன் சிறுமி உயிர் தப்பியுள்ளார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.