கை, கால்களில் பிரச்சனை ஏற்படும் போது, நாம் அதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. உதாரணத்திற்கு, பாதங்களில் வலி, பாதத்தின் தோலில் பிரச்சனை, நகங்களில் பிரச்சனை, கால் விரலின் நிறத்தில் அல்லது வடிவில் பிரச்சனை இருந்தால், மக்கள் அதை லேசாக எடுத்துக்கொள்கிறார்கள்.
ஆனால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இது மிகவும் ஆபத்தானது. ஏனென்றால் பாதங்களில் ஏற்படும் மாற்றங்கள் ஆனது இதய நோயின் தீவிர அறிகுறியாக இருக்கலாம்.
நிபுணர்களின் கூற்றுப்படி, கால்களில் பூஞ்சை தொற்று ஏற்படுவது, இதய நோயின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம். எனவே அதை ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அறிக்கையின் படி, நமது உடலில் முதன் முதலில் இதய நோயின் ஆரம்ப அறிகுறிகள் பாதங்களில் தோன்றும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
உண்மையில், கொலஸ்ட்ரால் எனப்படும் ஒரு ஒட்டும் பொருள் இரத்த நாளங்களில் உருவாகத் தொடங்கும் போது, அது இரத்தத்தைத் தடுக்கிறது, இதனால் உடலின் தொலைதூர பகுதிகளுக்கு குறைவான இரத்தத்தை விநியோகிக்கிறது. இதன் காரணமாக, அதன் அறிகுறிகள் முதலில் பாதங்களில் தோன்றத் தொடங்குகின்றன.
இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதால் இந்த பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதயத்தில் இருந்து கால்களுக்கு ரத்தமும், ஆக்ஸிஜனும் சரியாகச் செல்லாதபோது, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் பல மடங்கு அதிகரிக்கிறது.
கால்களுக்கு குறைவான இரத்த ஓட்டம் செல்லும்போது, கால் பிடிப்புக்கு வழிவகுக்கிறது. இந்த பிடிப்பானது சில சந்தர்ப்பங்களில், கால்களில் வலி மற்றும் வீக்கம் ஏற்படும்.
பாதங்களில் இரத்த ஓட்டம் குறைவாக இருக்கும் போது, அது நகங்களையும் பாதிக்கிறது. இதனால் நகங்கள் வலுவிழந்து உடையக்கூடும்.
எனவே எந்த சூழ்நிலையிலும் பாதங்களை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஏனென்றால், நம் கால்களின் ஆரோக்கியமானது, நமது முழு உடலின் ஆரோக்கியத்தை பற்றியும் கூறுகிறது. பல நோய்களின் அறிகுறிகள் முதலில் பாதங்களில் தோன்றும்.
ஆராய்ச்சியின் படி, 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் நான்கில் ஒருவர் ஏதாவது ஒருவித இதய நோயால் பாதிக்கப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சரியான நேரத்தில் பாதங்களை பராமரிப்பதன் மூலம் இதய பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே தடுக்கலாம்.
இரத்த நாளங்களில் கொழுப்பு படிய ஆரம்பிக்கும் போது, அதன் குறி பாதங்களிலும் தெரிகிறது. இது பெரும்பாலும் கால்களில் வலியை உண்டாக்குகிறது, இதனால் நடப்பதற்கு மிகவும் சிரமமாக இருக்கும். ஆராய்ச்சியின் படி, 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் நான்கில் ஒருவர் ஏதாவது ஒருவித இதய நோயால் பாதிக்கப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரியான நேரத்தில் பாதங்களை பராமரிப்பதன் மூலம் இதய பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே தடுக்கலாம். இரத்த நாளங்களில் கொழுப்பு படிய ஆரம்பிக்கும் போது, அதன் அறிகுறி பாதங்களிலும் தெரிகிறது. இது பெரும்பாலும் கால்களில் வலியை உண்டாக்குகிறது, இதனால் நடப்பதற்கு மிகவும் சிரமமாக இருக்கும்.
இருப்பினும், இந்த வலி சிறிது நேரம் கழித்து மறைந்துவிடும், இதன் காரணமாக மக்கள் பெரும்பாலும் கவனம் செலுத்துவதில்லை. இது இரண்டு கால்களிலும் ஒரே நேரத்தில் வலியை ஏற்படுத்தும். கூச்சம், வலி, எரிதல், தோல் வறட்சி, தோல் வெடிப்பு, கொப்புளங்கள், பாதங்களில் ஏற்படும் புண்கள் போன்றவற்றையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இது போன்ற பிரச்சனைகளை நீங்கள் கண்டால், உடனடியாக ஒரு மருத்துவரை அணுக வேண்டும்.