தினமும் எவ்வளவு நேரம் தூங்கணும் தெரியுமா?
ஓய்வு என்பது வேறு தூக்கம் என்பது வேறு இரண்டையும் குழப்பி கொள்ள கூடாது. வாழ்க்கைமுறை அன்றாட பழக்கங்களிலும் பல மாற்றங்களை கொண்டு வந்துவிட்டது.
அவற்றில் முறையான தூக்கத்தை இழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மனிதன் குழந்தை பருவத்திலிருந்தே தூக்கத்தை முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.
எந்த வயதில் எவ்வளவு தூக்கம் என்பதை இப்போது பார்க்கலாம்.
கடந்த 25 வருடங்களுக்கு முன்பு வரை தூக்கம் குறித்த விழ்ப்புணர்வு யாரும் இருந்திருக்கவில்லை. அதை வலியுறுத்த வேண்டிய அவசியமும் இருந்ததில்லை.
ஆனால் காலங்கள் மாற மாற குறிப்பாக இளைய தலைமுறையினர் இந்த தூக்கத்தை உரிய முறையில் கடைபிடிக்க வில்லை என்பது தான் இந்த தூக்கத்துக்கு கூட விழிப்புணர்வு தரும் கட்டாயத்தில் இருக்கிறோம்.
பள்ளி செல்லும் குழந்தைகள் தினமும் எவ்வளவு நேரம் தூங்கணும் தெரியுமா?
பள்ளிக்கு செல்லும் குழந்தைகளாக இருந்தால் தினமும் 10 மணி நேரம் தூங்க வேண்டும். இவர்கள் 8 மணி நேரத்துக்கு குறைவான தூக்கமோ 10 மணி நேரத்துக்கு அதிகமான தூக்கமோ கொண்டால் அடுத்த நாளில் நிச்சயம் சோர்வடைவார்கள்.
அம்மாக்கள் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை சீக்கிரம் சாப்பிட பழகுவதோடு விரைவில் படுக்கைக்கு செல்லவும் பழக்கப்படுத்த வேண்டும்.
இரவு 8 மணிக்காவது குழந்தைகளை தூங்க வைக்க பழகினால் தான் குறைந்தது மறுநாள் காலை 6 மணிக்கு எழுவதோடு அந்நாள் முழுவதும் சோர்வாகாமல் இருப்பார்கள்.
பிள்ளைகள் படுத்தவுடன் தூங்க வேண்டும் எனில் குழந்தைகளை தூங்கும் போது கம்ப்யூட்டர் முன்போ தொலைக்காட்சி முன்போ நீண்ட நேரம் அமர வைக்காதீர்கள்.
தூக்கத்தில் நடப்பது எப்படி முடியும்? தூக்கத்தில் நடப்பது என்றால் என்ன?
பதின்ம வயதினர் தினமும் எவ்வளவு நேரம் தூங்கணும் தெரியுமா?
பதினம் வயதினர் தினமும் 8 அல்லது 9 மணி நேரமாவது தூங்க வேண்டும்.
இதிலிருந்து இரண்டு மணி நேரம் கூடவும் கூடாது. இதிலிருந்து 1 மணி நேரம் குறையவும் கூடாது. இதில் இளவயது தலைமுறையினர் 6 மணி நேரத்துக்கு குறையகூடாது என்பதும் கவனிக்க தக்கது.
இது நடுத்தர வயது வரையில் இருப்பவர்கள் வரை அனைவருக்கும் பொருந்தும். வயதானவர்கள் 8 மணி நேரம் வரை உறங்கலாம்.
அவை 10 மணி நேரம் தாண்டி அதிகரிக்கவும் கூடாது. சிலர் ஐந்து மணி நேரத்துக்கு குறைவாக தூங்கும் போது உடல் சோர்வு மேலும் அதிகரித்து விடும்.
ஆனால் இயல்பாகவே இந்த வயதில் தூக்கம் என்பதே குறையும் போது ஆழ்ந்த தூக்கம் கேள்விக்குரிய தாகிறது.
தூக்கம் ஏன் அவசியம்
உடல் ஆற்றலோடு உற்சாகமாக செயல்பட மட்டும் அல்லாமல் வேறு பல நன்மைகளையும் இந்த தூக்கம் தருகிறது. உடலில் இருக்கும் உறுப்புகள் தூங்கும் போதும் இயங்குவதுண்டு.
அதில் 100% ஓய்வாக இருக்கும் உறுப்பு என்றால் கண்கள் தான் கண்களுக்குரிய ஓய்வை கொடுத்தால் தான் அவற்றில் குறைபாடு நேராமல் பார்க்க முடியும். அதை தூக்கத்தால் மட்டுமே நம்மால் கொடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தூங்குவதால் நினைவாற்றல் வளமாக இருப்பதாக மற்றொரு ஆய்வு தெரிவிக்கிறது. சில ஆய்வுகள் தூக்கமின்மையால் மன அழுத்தத்தை உண்டாக்குகிறது என்றும் எச்சரிக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.