ராஜீவ் காந்தி கொலை வழக்கு
1991ம் ஆண்டு மே மாதம் 21ம் திகதி தமிழத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் குண்டு வெடிப்பில் முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக பேரறிவாளன் , நளினி உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் 32 வருடங்கள் சிறையில் தண்டனை பெற்று வந்த பேரறிவாளன் கடந்த மார்ச் 9ம் திகதி விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று நளினி உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்நிலையில் பல வருடங்கள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்ற காரணத்தை சுட்டிக் காட்டி தொடர்ந்து இவர்களுக்கு விடுதலை மறுக்கப்பட்டது.
இந்நிலையில் அரசியல் சட்டத்தின் 161-வது பிரிவை பயன்படுத்தி பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்திருந்த நிலையில், உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கி உள்ளது.
பேரறிவாளன் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு, ஏனைய 6 பேருக்கும் பொருந்தும் என்று நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது.
நளினி உள்பட 6 பேரும் விடுதலை செய்யப்படுவதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் இந்த தீர்ப்புக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Android App Download Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.