- Advertisement -
அசாம் மாநிலம் சாச்சர் மாவட்டம், கங்கர் பகுதியில் ஒரு ஆடு மனித குழந்தையை போல குட்டியை போட்டுள்ளது தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இது குறித்து அந்த ஆடு வளர்ப்பவர் கூறும் போது : “ஆடு சினையாக இருந்த போது வழக்கமாக ஆடுகள் குட்டி போடுவது போல தான் குட்டி போடும் என கருதினோம்.
ஆனால் கடந்த திங்கட்கிழமை ஆடு குட்டி போடும் போது அது முழுதாக வளராத மனித குழந்தை போல இருந்தது. வழக்கமாக ஆட்டிற்கு இருக்கும் வால், இல்லை உடல் முழுவதும் மனித குழந்தையின் உடல் போல இருந்தது.
ஆனால் அதன் காது மற்றும் கால்கள் மட்டும் வித்தியாசமாக இருந்தன. இந்த ஆட்டு குழந்தை பிறந்து சில நிமிடங்களில் மரணித்துவிட்டது.
அது பிறந்த போது ஏதோ அதிசய பிறவி என்று தான் நினைத்தோம். ஆனால் அது இறந்துவிட்டது. அதனால் அதை குழி தோண்டிபுதைத்துவிட்டோம். ” என கூறினார்.
மனித உருவில் ஆட்டுக்குட்டி இருந்த செய்தி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.