திருமண ஊர்வலத்தில் மாப்பிள்ளை டான்ஸ் ஆடியதால் திருமணத்தை நிறுத்திவிட்டு மணப்பெண் வேறு நபரை திருமணம் செய்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா பகுதியை அடுத்த மல்காபூர் பாங்காரா பகுதியில் கடந்த 22ம் தேதி திருமணம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாலை 4 மணிக்க மேல் திருமணத்தை நடத்த முடிவு செய்திருந்தார்.
அதற்காக மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலமாக நடத்தப்பட்டது. அப்பொழுது உறவினர்கள் இசைக்கு ஏற்ப நடனடிமாடியபடி உற்சாகமாக வந்தனர்.
அப்பொழுது உற்சாக மிகுதியில் மாப்பிள்ளையும் களத்தில் இறங்கி உறவினர்களுடன் சேர்ந்து நடனமாட துவங்கினார். அது பெண் வீட்டாருக்கு பிடிக்கவில்லை. இதனால் இருவீட்டாருக்கும் இடையே சண்டை வெடித்தது.
இந்த சண்டை கைகளப்பாக மாறியது. பெண் வீட்டார் மாப்பிள்ளை மதுபோதையில் நடனமாடுவதாக குற்றம் சாட்டினர். மணப்பெண்ணும் அந்த மாப்பிள்ளையை திருமணம் செய்ய மறுத்துவிட்டார்.
ஆனால் ஒரு பெண்ணிற்கு திருமணம் ஊர்வலம் வரை வந்து நின்று போனால் அடுத்து அந்த பெண்ணிற்கு திருமணமே நடக்காது என பேச்சு நம்மூரில் இருப்பதால் மாப்பிள்ளை வீட்டார் திருமணத்திற்கு வந்திருந்த அவரது உறவினர்கள் ஒருவரது மகனையே திருமணத்தில் பேசி முடித்து அந்த பெண்ணிற்கு திருமணம் செய்து வைத்தனர்.
முதலில் பார்த்த மாப்பிள்ளை வீட்டார் ஊர்வலத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு திருப்ப சென்றனர். இந்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.