தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டத்திற்கு உட்பட்ட கெரகோடஅள்ளி பகுதியில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து ஏராளமான மாணவிகள் படித்து வரும் நிலையில், இந்த கல்லூரிக்கு போதிய பேருந்து வசதி இல்லை. தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள போதிலும், குறிப்பிட்ட சில பேருந்துகள் மட்டுமே நின்றுச் செல்கின்றன.
இதனால், அந்த ஒரு சில பேருந்துகளில் முண்டியடித்துக்கொண்டு மாணவிகள் ஏறி பயணம் செய்து வருகின்றனர்.
கல்லூரி நேரத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் அரசு செவிசாய்க்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், மே 5-ம் தேதி நேற்று கல்லூரி முடிந்து தருமபுரி செல்லும் பேருந்து ஒன்றில் கனரக வாகனங்களுக்கு மத்தியில் பேருந்து படிக்கட்டியில் தொங்கியபடி மாணவிகள் சிலர் ஆபத்தான பயணம் மேற்கொண்டனர்.
பெரியாம்பட்டி பிரிவு பகுதியில் இதனை தனது செல்போனில் பதிவு செய்த நபர் ஒருவர் இணையத்தில் பதிவு செய்த நிலையில் தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
தமிழகத்தில் அண்மை காலமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிலர் கெத்து என்ற பெயரில் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்வது குறித்த வீடியோ வந்த வண்ணம் உள்ளது.
ஆனால், காரிமங்கலம் கல்லூரி மாணவிகள் வேறு வழியின்றி ஆபத்து பயணம் செய்த இந்த காட்சிகளை பார்த்த பிறகாவது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.