கடமை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந் யுவதி ஒருவரின் கண்களுக்கு மிளகாயத்தூள் தூவிவிட்டு, தங்க சங்கிலி அபகரிக்கப்பட்ட சம்பவம், பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட 13 ம் கட்டைப் பகுதியில் பதிவாகியுள்ளது.
பசறை நகரிலுள்ள வைத்திய சிகிச்சை நிலையம் ஒன்றில் கடமை புரியும் 27 வயதுடைய யுவதியும், யுவதியின் தந்தையும், யுவதியின் உறவினர் ஒருவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளனர்.
அப்போது, பசறை 13 ம் கட்டைப் பகுதியில் வைத்து இனம் தெரியாத நபர்களினால் , மூவரின் கண்களுக்கும் மிளகாய்த்தூள் தூவப்பட்டு தங்கச் சங்கிலி அபகரிக்கப்பட்டுள்ளது.
சுமார் 30,000 ரூபாய் பெறுமதியான தங்க சங்கிலியே இவ்வாறு அபகரிக்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பசறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.